அரசாங்க வேலை கிடைக்க சூரிய வழிபாடு..!
�� ஒவ்வொருவரும் அரசாங்க பணியில் இருக்க வேண்டும் என நினைப்பதுண்டு. அதற்காக அவர்கள் மிகவும் கடினமாக உழைப்பார்கள். அதோடு மட்டுமின்றி கடவுளின் அனுக்கிரகமும் நமக்கு தேவை. ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் பலமாக இருந்தால் கண்டிப்பாக அரசாங்க வேலை கிடைக்கும். அப்படி பலம் இல்லாதவர்கள் சூரிய பகவானை பூஜித்து வழிபட்டால் அவர்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
�� ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் காலை 6 முதல் 7 மணிக்குள் சூரியன் உதிக்கும் திசை பார்த்து, ஒரு விளக்கு ஏற்றி வைத்து, சூரியனை நோக்கி சாஷ்டங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.
�� விளக்கு ஏற்றும் போது, கல்கண்டு அல்லது ஏதாவது இனிப்பு வகை நைவேத்தியமாக வைக்க வேண்டும். சூரிய பகவானுக்கு உகந்த தும்பை மலர்களை வைக்கலாம். ஏற்றி வைத்த விளக்கை சுற்றி 21 முறை வலம் வர வேண்டும்.
�� சூரியனுக்குரிய ஸ்லோகம் சொல்லி வழிபடலாம். பிறகு நிவேதனமாக படைத்த எதையும் வீணாக்காமல் சாப்பிட வேண்டும்.
இவ்வழிபாட்டை செய்ய தகுந்தவர்கள் :
➽ அதிகாரமிக்க பதவிக்கு முயற்சி செய்பவர்கள்
➽ ஆளுமை திறன் வேண்டுவோர்
➽ தந்தை மகன் உறவு சரியில்லாதவர்கள்
➽ அரசு வேலைக்கு முயற்சி செய்வோர் செய்யலாம்
➽ கண் பார்வை குறைபாடு உடையவர்கள்
➽ ஜாதகத்துல சூரிய திசை நடப்பவர்கள், சூரியன் நீசமாக இருந்தால், நீச கிரகத்தோட சேர்ந்து இருந்தால், பகையாக இருந்தால், மறைந்து இருந்தால்.
Comments
Post a Comment