கடன் தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி?
�� மானிட வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளது. கடன் தொல்லை என்பது ஒரு மனிதருக்கு வரக்கூடாத பிரச்சனைதான், வந்து விட்டால் என்ன செய்வது? வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லையே எனக் கவலைப்படுகிறீர்களா? கவலை வேண்டாம். நம் முன்னோர்கள் கூறியுள்ள பரிகாரங்களை நம்பிக்கையுடன் ஏற்றுச் செய்தால் நிச்சயமாகக் கடன் தொல்லைகள் தீரும்.
�� வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவிப்பார்கள், வருடத்தில் ஒருசில குறிப்பிட்ட நாட்களில் கடன் தொகையில் ஒரு சிறு பகுதியை திருப்பிக் கொடுத்தால், விரைவிலேயே முழுக்கடனையும் திருப்பிக் கொடுக்கும் வல்லமையும், வாய்ப்பு வசதிகளும் உருவாகும் எனக் கூறப்படுகிறது. அத்தகைய நாட்கள் எவை என்பதைப் பார்ப்போம்.
�� அஸ்வினி நட்சத்திரமும், மேஷ லக்னமும், அனுஷம் நட்சத்திரமும் விருச்சக லக்னமும் கூடிய காலத்திற்கு மைத்ர முகூர்த்தம் என்று பெயர். இந்த முகூர்த்தத்தில் கடன் தொகையில் ஒரு சிறு தொகையைக் கொடுத்தால் கொடுக்க வேண்டிய கடன் தொகை எவ்வளவு அதிகமாக இருப்பினும் அக்கடன் முழுவதும் விரைவில் தீர்ந்துவிடும்.
�� செவ்வாய்கிழமையும், நவமி திதியும், ஞாயிற்று கிழமையும், சதுர்த்தி திதியும், சனிக்கிழமையும், சதுர்த்தி திதியும் சேர்ந்து விடும் நாளில் குளிகன் உதயமாகும் சமயத்தில் கொடுக்க வேண்டிய கடன் தொகையில் சிறிதளவு கொடுத்தாலும் மிக மிக விரைவில் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
�� மேற்கண்ட தினங்களில் சஷ்டி கரணத்தில் குளிகன் சேரும்பொழுது கடனைத் திருப்பிக் கொடுக்கலாம்.
�� சனிக்கிழமை பிரதோஷ காலத்தில், சர லக்கினங்களான மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய லக்கினங்கள் உதயமாகும் சமயத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்கலாம்.
�� செவ்வாய்க்கிழமை பிரதோஷ காலத்தில் சூரிய அஸ்தமானத்திற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு கடனைத் திருப்பிக் கொடுக்கலாம்.
�� லக்னத்தில் ராகுவும், வியாதிபாத யோகமும் கூடிய காலத்தில் கடனைத் திருப்பித் தரலாம்.
�� சூரிய சந்திர கிரகணம் ஏற்பட்டு கிரகணம் விலகும் சமயம் கடனைத் திருப்பித் தரலாம்.
�� செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஓரையில் கடனைத் திருப்பித் தரலாம்.
�� மேற்கண்ட நாட்களை பஞ்சாங்கங்களைப் பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஜோதிடம் தெரிந்தவர்கள் தாமாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஜோதிடம் தெரியாதவர்கள் ஜோதிடர்களை அணுகி மேற்கண்ட நாட்களைத் தேர்தெடுத்துக் பயனடைவீர்களாக...!
Comments
Post a Comment