சஷ்டி விரத மகிமை!.....

✧ சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்ற பழமொழி தவறானது. சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது தான் உண்மையான பழமொழி. அதாவது, சஷ்டி விரதம் இருந்தால் திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் பெண்ணின் அகப்பையாகிய கருப்பையில் குழந்தை வளரும் என்பது அதன் பொருள்.

✧ சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு. இவ்விரதத்தின் மூலம் நாம் விரும்பிய பலன்களை பெறலாம். முக்கியமாக குழந்தை வரம் இல்லாத பெண்களுக்கு இது சிறந்த விரதமாகும்.

சஷ்டி விரதத்தை கடைப்பிடிப்பது எப்படி?

✧ ஒவ்வொரு மாதத்திலும் சுக்கில பட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து, குளித்து முருகனை மனம் உருக வணங்க வேண்டும். பூரண கும்பத்தில் தண்ணீர் நிரப்பி மாவிலை வைத்து, தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும், அட்சதையும் இட்டு முருகனை அதில் ஆவாகனம் செய்து மலரிட்டு தீபம் காட்டி வழிபடுவது நல்லது.

கடைபிடிக்கும் முறை :
✧ சஷ்டி விரத நாட்களில் பகலில் தூங்குதல் கூடாது.

✧ சஷ்டி தினத்தன்று இரவிலும் விழித்து இருப்பது கூடுதல் பலன்களை தரும்.

✧ முருகனை ஆறு காலமும் பு+ஜை செய்ய வேண்டும்.

✧ 6 நாட்களும் கந்தனின் சரித்திரங்களையும், சிறப்புகளையும், திருவிளையாடல்களையும், முருகன் செய்த அற்புதங்களையும் கேட்க வேண்டும்.

✧ திருப்புகழ் பாராயணம் செய்ய வேண்டும். எந்த அளவுக்கு பாராயணம் செய்கிறோமோ அந்த அளவுக்கு முருகனை நெருங்க முடியும்.

✧ பிரார்த்தனை, பாராயணம் நேரம் தவிர கூடுதல் நேரம் கிடைத்தால் அந்த சமயத்தை வீணாக்காமல் முருகனை மனதில் நிலை நிறுத்தி தியானம் செய்யலாம்.

✧ இதே விரதத்தை ஒவ்வொரு மாதமும் சஷ்டி விரத சமயத்தில் கடைப்பிடிக்கலாம்.

சஷ்டி விரத பலன்கள் :

✧ சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் எல்லாம் தீர்ந்து விடும்.

✧ விரதத்தை கடைபிடிக்க, பக்தர்களுக்கு எண்ணிய நலமும், புண்ணிய பலமும் கிடைக்கும்.

✧ சஷ்டி விரத வழிபாடு செய்து முருகனிடம் வேண்டினால், கேட்டதை பெறலாம்.

✧ சஷ்டி விரதம் ஐஸ்வர்யத்தை தரக்கூடியது.

✧ சஷ்டி திதியில் விரதம் இருந்தால் விரும்பிய அனைத்தையும் பெறலாம்.

✧ குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று.

✧ 16 பேறுகளில் ஒன்றாகவே கருதப்படுவது குழந்தைப் பேறு. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் சஷ்டி விரதம் மேற்கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

எதிரிகளை அழிக்கும் ஆதித்ய ஹிருதயம்

27 நட்சத்திரத்தின் குறிப்புகள்

ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை!...