திருமணத்தின் போது ஜாதகத்தில் கவனிக்க வேண்டியவை !
திருமணம் என்பது இரு மனங்கள் நீண்ட தூரம் செல்லும் இனிய பயணம். இல்லற பயணம் இனிமையாக அமைய வேண்டுமானால் உடன் வருகிற துணையின் ஒத்துழைப்பும், ஆதரவும் மிக அவசியமானது. அந்தத் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மணமகன் மற்றும் மணமகள் தேர்வு செய்வதில் கவனத்தில் கொள்ள வேண்டியவை :
லக்னம் :
மணமகனுக்கு முதல் வீடு லக்னம் ஆகும். இது எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். மேலும் இந்த முதல் வீடான லக்னம் 6,8 மற்றும் 12-ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ எந்தவிதமான சம்பந்தமும் இருக்கக் கூடாது. லக்னம் நன்றாக இருந்தால் மட்டுமே ஜாதகர் மிகச்சிறந்தவனாக, நல்ல குணம், உடல் நிலை, தீய பழக்க வழக்கம் இல்லாமல், வாழ்க்கையில் சுயமாக முன்னேற்றம் பெரும் அமைப்பை பெறமுடியும்.
குடும்ப ஸ்தானம் :
ஜாதகருக்கு இரண்டாம் வீடு குடும்ப ஸ்தானம் ஆகும். இந்த இரண்டாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்கப்படக் கூடாது, அதாவது லக்னம் 6,8,12-ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் படக்கூடாது. குடும்ப ஸ்தானம் நல்ல நிலையில் இருந்தால் தான் நிலையான வருமானம், இனிமையாக பேசும் தன்மை, மனைவியை நேசிக்கும் தன்மை, நல்ல பாரம்பரிய குடும்பத்தை சார்ந்த அமைப்பு, மனைவியிடம் இறுதிவரை அன்பு மற்றும் பாசம் கொண்டவராக போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டு இருப்பார்.
பூர்வ புண்ணியம் ஸ்தானம் :
ஜாதகருக்கு ஐந்தாம் வீடு பூர்வ புண்ணியம் ஸ்தானம் ஆகும். இந்த ஐந்தாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்கப்படக் கூடாது. பூர்வ புண்ணிய ஸ்தானம் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகனுக்கு தன் குலம் விளங்க புத்திரன், துன்பம் வரும் தருணத்தில் பலரின் உதவி கிடைக்கும்.
சத்ரு ஸ்தானம் :
ஜாதகருக்கு ஆறாம் வீடான சத்ரு ஸ்தானம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இந்த அமைப்பை பெற்ற ஜாதகர் வாழ்க்கையில் இறுதிவரை தம்பதியினர் இருவரும் இணை பிரியாத நிலையை பெற்றிருப்பார்கள்.
களத்திர பாவகம் :
ஜாதகருக்கு ஏழாம் வீடு களத்திர பாவகம் ஆகும். களத்திர பாவக வீடானது எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. களத்திர பாவகம் நன்றாக உள்ள ஜாதகர் தனது மனைவியை தவிர மற்ற பெண்களை தனது தாயாகவும், சகோதரியாகவும் பாவிக்கும் தன்மை உள்ளவராகவும், தன் உடலில் ஒரு பாதி என்ற எண்ணம், அன்யோன்யமாக குடும்பம் நடத்தும் தன்மை, இல்லற வாழ்க்கை எப்பொழுதும் மகிழ்ச்சி போன்ற சிறப்புகளை கொண்டு விளங்குவார். ஜீவன ஸ்தானம் : பத்தாம் வீடான ஜீவன ஸ்தானம் நல்ல நிலையில் இருக்கும் ஜாதகர், தனது மனைவியின் ஆசைகளை நிறைவேற்றும் திறன், திருமணத்திற்கு பிறகு விரைவான முன்னேற்றம், நிரந்தர தொழில், நல்ல குணம் போன்ற அமைப்புகளை கொண்டவராக விளங்குவார்.
இந்த 1,2,5,6,7 மற்றும் 10-ம் வீடுகள் நன்றாக இருக்கும் ஒரு ஜாதகனுக்கு தனது மகளை பெற்றோர்கள் கன்னிகா தானம் செய்து வைக்கலாம். அப்படி செய்தால் நிச்சயம் திருமணத்திற்கு பிறகு இருவரும் வாழையடி வாழையாக வளமுடன் வாழ்ந்திருப்பார்கள்.
Comments
Post a Comment