எதிரிகளை அழிக்கும் ஆதித்ய ஹிருதயம்
எதிரியை அழிக்க வகுத்தது ஆதித்ய ஹ்ருதயம் . எதிரி அழியத் தகுந்த உபாயங்களைத் தானே கண்டு பிடித்து அழிக்கும் மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம் . ராமரின் திகைப்பு பாவமே மொத்தமாக ஓருருவம் எடுத்து வந்தவன் போல விளங்கிய ராவணனை ராமர் அழிக்க நினைத்த போது அவனை சுலபத்தில் வெல்ல முடியவில்லை . அஸ்திரங்களுக்கு எதிர் அஸ்திரங்கள் , பலத்திற்கு பலம் , தவ சக்திக்கு எதிர் தவ சக்தி , முக்கோடி வாழ் நாள் , சங்கரன் கொடுத்த சந்திரஹாஸம் என்ற வாள் என்று இவை எல்லாமாகச் சேர , வெல்ல முடியாத எதிரியாக அவன் விளங்கினான் . ராமர் கலங்கினார் . களைத்தார் . அன்னையின் நினைவு அருளும் உயிர்ச்சக்தி என்ன செய்வதென்று தெரியாத நிலையில் அகஸ்திய மாமுனிவர் ராமர் எதிரே தோன்றினார் . தித்ய ஹ்ருதயம் என்னும் சக்தி வாய்ந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார் . தித்ய ஹ்ருதயம் சூரியனைக் குறித்த ஒரு துதி . இது விசேஷ மந்திரங்கள் அடங்கிய ஒன்று ! ராமர் இதை ஓதி ராவணனை எதிர்கொண்டார் . ராவணன் மீது பலம் பொருந்திய பாணங்கள் பாய்ந்தாலும் அவன் சமாளித்து மீண்டும் ...